2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இயற்கை அனர்த்தங்களுக்கு துரிதமாக அனுசரணை வழங்குவதற்கான சார்க் உடன்படிக்கை இந்த உடன்படிக்கையின் மூலம் வலய நாடுகளுக்கிடையே ஒருபக்க மற்றும் இருபக்க உறவுகள் பலப்படுத்தப்படுமென்பதுடன், அனர்த்தங்களின் போது பாதிப்புக்குள்ளாகும் நாடுகளை ஆகக் குறைந்த காலப்பகுதிக்குள் இயல்பு வாழ்க்கையை வழமைநிலைக்கு கொண்டுவரும் பொருட்டு உதவிகளை வழங்கும் சந்தர்ப்பங்களும் உருவாகும். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டு மாலைதீவில் நடாத்தப்பட்ட 17 ஆவது சார்க் மாநாட்டில் கைச்சாத்திடப்பட்ட மேற்போந்த உடன்படிக்கைக்கு அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது. |