• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச பாடசாலைகளையும் தனியார் பாடசாலைகளையும் ஒழுங்குறுத்தல்
ஏற்கனவே பல சருவதேச பாடசாலைகள் நாட்டில் இயங்குவதோடு, அவை முலீட்டுச்சபைச் சட்டத்தின் கீழ் அல்லது கம்பனிகள் சட்டத்தின் கீழ் வியாபார நிறுவகங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன . நாட்டின் தேவைகளுக்கு ஏற்றவாறு சருவதேச பாடசாலைகளையும் தனியார் பாடசாலைகளையும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஏற்கனவேயுள்ள சட்டங்களிலும் ஒழுங்கு விதிகளிலும் திருத்தங்களைக் கொண்டுவரும் தேவை எழுந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கைகளுடன் இணைந்து செல்லும் பொருட்டு இந்தப் பாடசாலைகளை ஒழுற்குறுத்துவதற்கான சட்ட கட்டமைப்பையும் பொறிமுறையையும் வகுத்தமைக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.