2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2013 யூன் மாதம் 08 ஆம் திகதி ஏற்பட்ட புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சலுகையளித்தல் 2013‑06‑08 ஆம் திகதி ஏற்றபட்ட புயல் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு நிகழ்ந்த கடும் சேதம் அமைச்சரவையினால் பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது :
(I) மரணமடைந்த / காணமற்போன மீனவர் ஒருவரின் கிட்டிய உறவினருக்கு 100,000/- ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கும்;
(II) முழுமையாக சேதமடைந்த காப்புறுதியற்ற படகு மற்றும் உபகரணங்களுக்காக புதிய படகுகளையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்து வழங்குவதற்கும்; அத்துடன்
(III) பகுதி சேதமடைந்த படகுகளின் திருத்த வேலைகளுக்காக செலவாகிய தொகையின் 50 சதவீதத்தை சலுகை கொடுப்பனவொன்றாக வழங்குவதற்கும். |