• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஆப்கானிஸ்தான் குடியரசுக்கும் இடையில் கலாசாரதுறை சார்ந்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடல்
இரண்டு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதற்காக கலாசாரம், கலைகள் விவகார அமைச்சர் மாண்புமிகு ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நட்புறவு இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேலும் பலப்படுத்தப்படுவதோடு, இதன் மூலம் இருநாடுகளுக்குமிடையில் மிக நெருங்கிய, பலம்மிக்க கலாசார உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும், மேம்படுத்தும் தேவை உறுதிசெய்யப்படுகின்றது.