2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொதுநலவாய இளைஞர் மாநாட்டுக்கு நிதி ஏற்பாடுகளை வழங்குதல் 2013 நவம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதிவரை கொழும்பில் நடாத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டுக்கு ஒருங்கிணைவாக நவம்பர் மாதம் 10 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதிவரை அம்பாந்தோட்டை சருவதேச மாநாட்டு மண்டபத்தில் பொதுநலவாய இளைஞர் மாநாட்டை நடாத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் பொதுநலவாய நாடுகளின் 54 உறுப்பு நாடுகள் கலந்துகொள்வதோடு, இதன் ஆரம்ப விழாவிற்கு உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் சுமார் 1500 பேர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டை நடாத்து தொடர்பிலான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |