2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சீன அபிவிருத்தி வங்கிக் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டில் இலங்கையின் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு சீன அபிவிருத்தி வங்கிக் கூட்டுத்தாபனத்தினால் 580 மில்லியன் ஐ.அ.டொலர்களைக் கொண்ட நிதி உதவி வழங்கப்படவுள்ளது. சீன அபிவிருத்தி வங்கிக் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கையின் நிதி, திட்டமிடல் அமைச்சுக்கும் இடையில் மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |