2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சருவதேச சுற்றாடல் தினத்தைக் கொண்டாடுதல் 2013 1992 ஆம் ஆண்டில் பிறேசில் நாட்டில் நடாத்தப்பட்ட சருவதேச பூகோள மாநாட்டில் சுற்றாடல் சமவாயங்களில் கைச்சாத்திட்ட இலங்கை உட்பட சகல நாடுகளும் யூன் மாதம் 05 ஆம் திகதி சருவதேச சுற்றாடல் தினத்தைக் கொண்டாடுவதற்குக் கட்டுப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 2013 யூன் மாதம் 05 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள சருவதேச சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாக அதிமேதகைய சனாதிபதியின் தலைமைத்துவத்திலும் மாவட்ட மட்டத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களினதும் அரசாங்க நிறுவனங்களினதும் பங்களிப்புடன் முழுநாடும் தழுவப்படும் விதத்தில் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5,000ம் பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொள்ளவார்கள். இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்குரிய தொடர் நடவடிக்கைகளைச் செய்வதற்கு சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |