2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்தியாவில் ஆந்திரா பிரதேசத்தில் நிருமாணிக்கப்படுகின்ற ஶ்ரீ பர்வதாராம (புத்தவனம்) பௌத்த தொனிப்பொருள் பூங்கா (Buddist Theam Park) தொடர்பில் இலங்கையின் பங்களிப்பினை வழங்குதல் பல நாடுகளிலும் பௌத்த மதம் சம்பந்தமான வரலாற்று நிகழ்வுகள் மற்றும் மதம் சார்ந்த ஆக்கங்களை திரட்டி சருவதேச கலாசார நிலையமொன்றை உருவாக்குவது ஆந்திரா பிரதேச சுற்றுலா, ஊடக, கலாசார அமைச்சின் மூலம் ஆரம்பிக்கப்படுள்ள இந்தக் கருத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 7.98 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் இந்தக் கருத்திட்டத்திற்கு உரிய தொடர் நடவடிக்கைகளை செய்யும் பொருட்டு கலாசாரம், கலைகள் விவகார அமைச்சர் மாண்புமிகு ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |