• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறையில் இளைஞர் பூங்காவொன்றைத் தாபித்தல்
நாட்டின் இளைஞர் சமுதாயத்துக்கு அவர்களுடைய ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பதற்கு இடவசதியை ஏற்பாடு செய்யும் பொருட்டு சிறந்த சூழல் நட்புறவுடன் கூடிய ஒரு சூழலுக்குள் இதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் சபைக்கு 2013 ஆம் ஆண்டிற்காக குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி 80 மில்லியன் ரூபா செலவில் மாத்தறை, எலியகந்தையில் அமைந்துள்ள காணித்துண்டில் இளைஞர் பூங்காவொன்றைத் தாபிப்பதற்கு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையி னால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.