• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி புதிய நகரத்திலுள்ள காணித் துண்டொன்றை இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பதற்காக இறையிலி கொடைப் பத்திரத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவுக்கு கையளித்தல்
இரத்தினபுரி புதிய நகரத்தில் பொது மருத்துவமனைக்கு அருகாமையில் அமைந்துள்ள சுமார் 25 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியை , இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்வியியல் கல்லூரியை தாபிக்கும் பொருட்டு இந்தப் பல்கலைக்கழகத்திற்குக் கையளிப்பதற்கு இயலச் செய்யும் விதத்தில் பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவுக்கு குறித்தொதுக்குவதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.