2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் பெலாருஸ் குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையேயான மதியுரை தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் இலங்கைக்கும் பெலாருசுக்கும் இடையில் நெருங்கிய நட்புறவு மிக்க தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதும் அபிவிருத்தி செய்வதுமாகும். மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் பெலாருஸ் குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையே கைச்சாத்திடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |