• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமான அனர்த்தங்களின் போது சோதனையிடுவதற்கும் மீட்பதற்குமான சேவை - இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும், இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான சோதனையிடுவதற்கும் மீட்பதற்குமான முன்னேற்பாடுகள்
இலங்கை சருவதேச சிவில் விமானசேவைகள் சமவாயத்தின் (சிக்காகோ சமவாயம் - 1944) ஒரு தரப்பாக உள்ளமையினால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சருவதேச தரங்கள் மற்றும் சிபாரிசு செய்யப்பட்ட செயற்பாடுகளை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளது. தேவையான சந்தர்ப்பங்களில் பரஸ்பர ஒத்துழைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் சோதனையிடுவதற்கும் மீட்பதற்குமான சேவைகைளை வழங்குவதற்கு குடியரசுக்குள்ள ஆற்றலை பலப்படுத்துவதற்கு அண்டைய நாடுகளுடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ள வேண்டியது தேவையொன்றாகும். மேற்போந்த நோக்கத்திற்காக அவுஸ்ரேலியா, இந்தியா, இந்தோனேஷியா, மாலைத்தீவு ஆகிய நாடுகளுடன் இத்தகைய எற்பாடுகளைச் செய்து கொள்வதற்காக சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பியங்கர ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.