• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாட்டு மாணவர்களுக்கான இலங்கை அரசாங்கத்தின் சனாதிபதி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம்
ஏற்கனவே 2011 ஆம் ஆண்டிலிருந்து இனங்காணப்பட்ட 48 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி அமைச்சின் ஊடாக 100 புலமைப் பரிசில்களை வழங்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்காக வழங்கப்படும் வசதிகளை அதிகரிப்பதற்கும் இந்த புலமைப் பரிசில்களுக்குத் தகைமை பெறும் நாடுகளுக்கு இடையில் ஓமான், உகண்டா, எதியோப்பியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேணியா, அயர்லாந்து, சுவாசிலாந்து, சீசெல்ஸ், பேர்க்கினா ஆகிய 10 நாடுகளையும் புதிதாக சேர்ப்பதற்கு உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.