• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நுண்பாக கைத்தொழில்களின் தலைமைத்துவ மற்றும் தொழில்முயற்சியாளர்களின் மேம்படுத்தல் கருத்திட்டம் - கட்டம் III - சுழற்சி நிதிய கடன் திட்டம்
இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான யப்பான் வங்கிக்கும் இடையிலான உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம், சிறிய மற்றும் நுண்பாக கைத்தொழில்களின் தலைமைத்துவ மற்றும் தொழில்முயற்சியாளர்களின் மேம்படுத்தல் கருத்திட்டத்தின் கட்டம் III (சுழற்சி நிதியம்) இன் கீழ் கிடைக்கும் பணத்தொகை மத்திய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு சுழற்சி நிதியமொன்றாக பயன்படுத்துதல் வேண்டும். பொது திறைசேரியினால் இலங்கை மத்திய வங்கியில் பேணப்படும் இந்த சுழற்சி நிதியத்திலிருந்து 300 மில்லியன் ரூபாவை இந்த ஆண்டில் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் பொருட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. சுழற்சி நிதியத்திலிருந்து கடன் வழங்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் பங்களிப்பு நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் பொருட்டும் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.