2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
அரசாங்க அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் செயற்படுத்துதலை கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் சமூக ஆலோசனை குழுக்களை நியமித்தல் - இலங்கையின் அனைத்துப் பிரசைகளினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றதுடன், அவ்வாறான வேலைத்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை கண்காணிப்பதற்கு சமூகத்தினரை ஈடுபடுத்துவதன் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. அதேபோன்று சமூகத்தின் அறிவு மற்றும் பங்களிப்பு குறித்த நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் சார்பில் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேசம் ஒவ்வொன்றிலும் திட்டவட்டமான தேவைகளை நிறைவு செய்வதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதென உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கப்பெறும். இதற்கிணங்க "உருமய" காணி உரிமை நிகழ்ச்சித்திட்டம் மலையக நூற்றாண்டு நிகழ்ச்சித்திட்டம், கமத்தொழில் நவீனமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அரிசி விநியோக நிகழ்ச்சித்திட்டம் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உரிய பிரதேச செயலாளர்களுடன் ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்கு சமூக ஆலோசனைக் குழுக்களை கௌரவ அடிப்படையில் நியமிப்பதற்கு மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |