• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
குற்றச் செயலின் மூலம் உழைக்கப்பட்ட சொத்துக்கள் பற்றிய சட்டமூலம்
- சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவாக்கப்பட்ட கடன் வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 2024 ஆம் ஆண்டளவில் சொத்துக்களை மீட்பது சம்பந்தமாக முழுமையான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படவேண்டியுள்ளது. அதற்கிணங்க நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் குற்றச் செயலின் மூலம் உழைக்கப்பட்ட சொத்துக்கள் பற்றிய சட்டம் தொடர்பில் தேவையான கொள்கை, சட்ட கட்டமைப்பு மற்றும் நடவடிக்கைமுறையினை தயாரிக்கும் பொருட்டு 2023 மார்ச் மாதத்தில் நீதித்துறைசார் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக்கொண்டு குற்றச் செயலின் மூலம் உழைக்கப்பட்ட சொத்துக்கள் பற்றிய சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.