2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் கூட்டமைப்பில் இலங்கை தலைமைத்துவத்தை பொறுப்பேற்றதன் பின்னர் 2024 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் - இந்து சமுத்திரத்தை எல்லையாகவும் 23 உறுப்பு நாடுகளையும் கொண்ட இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் கூட்டமைப்பின் தலைமைத்துவம் இலங்கைக்கு 02 வருட காலப்பகுதிக்கு கிடைத்துள்ளமையினால், 2024 ஆம் ஆண்டினுள் இலங்கையானது ஒருசில உத்தியோகபூர்வ கூட்டங்களை ஏற்பாடு செய்யவேண்டி உள்ளது. அதற்கிணங்க பின்வருமாறு உத்தியோகபூர்வ கூட்டங்களை நடாத்துவதற்கும் அதற்கான அனுசரணையினை ஏற்பதற்குமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
i இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் கூட்டமைப்பின் சிரேட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் 26 ஆவது கூட்டம் 2024 மே மாதம் 30 ஆம் 31 ஆம் திகதிகளில் நடாத்துதல். ii. சிரேட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் 27 ஆவது வருடாந்த கூட்டத்தை 2024 நவெம்பர் மாதத்தில் நடாத்துதல். iii. 24 ஆவது அமைச்சர்கள் மட்ட கூட்டத்தை 2024 நவெம்பர் மாதத்தில் நடாத்துதல். |