• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
வலுசக்தி துறை சார்பில் புதிய ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றை அறிமுகப்படுத்துதல்
- பெற்றோல், டீசல் மண்ணெண்ணெய், விமான எரிபொருள், திரவ பெற்றோலிய வாயு மற்றும் உராய்வுநீக்கி எண்ணெய் உட்பட பெற்றோலிய உற்பத்திகளின் இறக்குமதி, சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை என்பன நடைமுறையிலுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் செயற்பட்டாலும் இந்த துறை சார்பில் விரிவான ஒழுங்குறுத்துகை பொறிமுறையொன்று இல்லை. பல தனியார் நிறுவனங்களும் பெற்றோலிய உற்பத்திகளின் இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் இணைந்துள்ளமையினால் இந்த துறை சார்ந்த சவால்களுக்கு தீர்வுகளை கண்டறிதல், உற்பத்திகளின் தரத்தினை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோர், முதலீட்டாளர்கள் உட்பட ஏனைய தரப்பினர்களின் தேவைகளை பாதுகாத்தல் என்பன பொருட்டு சுயாதீன, ஆற்றல்மிக்க, பயனுள்ள மற்றும் வினைத்திறன்மிக்க ஒழுங்குறுத்துகை பொறிமுறையொன்றின் தேவை இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், இது தொடர்பிலான விடயங்களை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கும் சட்ட கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.