2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
'சுபநேரத்தில் மர நடுகை' - தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் - 2024 ஆம் ஆண்டிற்கான புதுவருட பிறப்பு தொடர்புபட்ட சுபநேர குறிப்புக்கு அமைவாக ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி மு.ப. 6.16 மணிக்கு தேசிய மரநடுகை சுபநேரமானது அமைந்துள்ளது. இந்த தருணத்தில் ஏற்றுமதி செய்யக் கூடிய பல்லாண்டு பயிர் அல்லது உணவாக பயன்படுத்தக்கூடிய பெறுமதி வாய்நத பல்லாண்டு பயிரை நடும் பொருட்டு பொதுமக்களுக்கு அறியச்செய்விப் பதற்கும் அதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குமாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |