2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
அரசுடமை வங்கிகள் சம்பந்தமாக முன்மொழியப்பட்ட சீர்த்திருத்தங்களை செயற்படுத்துதல் - அரசுடமை வங்கிகளின் முழு நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை போன்ற துறைகளில் நிலவும் பலவீனங்கள் காரணமாக கடந்த காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது இந்த வங்கிகள் கடும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. ஆதலால், இத்தகைய பிரச்சினைகள் மீள உருவாவதை தவிர்க்கும் நோக்கில் இந்த வங்கிகளில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்கள் பல சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இலங்கை மத்திய வங்கி போன்ற நிறுவனங்களின் உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் குழுவொன்றினால் இனங்காணப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வழக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதிகள் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கட்டமைப்பு ரீதியிலான தேவையொன்றாகவும் அதேபோன்று உலக வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி கொள்கை செயற்பாடுகளின் கீழான ஆரம்ப செயற்பாடுகளாகவும் குறித்த சீர்த்திருத்தங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கிணங்க, குறித்த சீர்த்திருத்த பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |