• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
'அனைவருக்கும் ஆங்கிலம்' என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2,500 ஆங்கில மொழிமூல ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்தல்
- ஆங்கில மொழிமூலம் சாதாரண தரத்திற்கான பாடங்களை கற்பிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 4,441 ஆக இருந்த போதிலும் இதன் பொருட்டு சுமார் 6,500 ஆசிரியர்களின் தேவை நிலவுகின்றதெனவும் பெரும்பாலானா பாடசாலைகளில் தற்போது சேவை புரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக தேவையான பணிகளைத் திட்டமிட்டு ஆங்கில மொழிமூலம் கற்பித்தல் விரிவுபடுத்தப்பட்டுள்ளதெனவும் 765 பாடசாலைகள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் போது இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தற்போது ஆங்கில மொழிமூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் 765 பாடசாலைகளை 2024 ஆம் ஆண்டில் 1,000 பாடசாலைகளாக அதிகரித்து ஆசிரியர் தேவையினைப் பூர்த்தி செய்வதற்கு ஆங்கில மொழியில் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களின் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையை 6,500 வரை அதிகரிப்பதற்கும் அதன் பொருட்டு ஆங்கில மொழிமூலம் விடயங்களை கற்பிக்கும் 2,500 ஆசிரியர்களை ஆட்சேப்பு செய்வதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் கல்வி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.