2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற அங்கீகாரத்தின் பொருட்டு கட்டளையொன்றை சமர்ப்பித்தல் - இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் சுங்கத் தீர்வை தாராளமயமாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு 2023‑05‑29 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2018‑05‑01 ஆம் திகதியன்றுக்கு செஸ்வரி அமுலிலிருந்த விதம் சம்பந்தமாக கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த நிகழ்ச்சித்திட்டமானது 'தொகுதி O', 'தொகுதி 10' மற்றும் 'தொகுதி X' என மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 'தொகுதி 10' என்பதன் கீழ் வகுப்பீடு செய்யப்பட்டுள்ள HS குறியீட்டு இலக்கம் 1,087 சார்பில் உரிய செஸ்வரியில் 1/5 ஐ முதல் வருடாந்த தவணையை அகற்றுவதையும் 'தொகுதி O' என்பதன் கீழ் வகுப்பீடு செய்யப்பட்டுள்ள HS குறியீட்டு இலக்கம் 300 சார்பில் ஏற்புடையதாகும் செஸ் வரியை ஒரே தடவையில் அகற்றுவதையும் அமுல்படுத்துவதற்காக 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழான கட்டளை 2024‑01‑04 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |