• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அரசாங்க காணி கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு காணிகளை கையளித்தல்
- இலங்கை துறைமுக அதிகாரசபையினால் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சுமார் 50 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு 2017‑12‑12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உரிய காணியை இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கு அரசாங்க பிரதான விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் மீது முற்பணக் கொடுப்பனவொன்றாக 52 மில்லியன் ரூபாவை இலங்கை துறைமுக அதிகாரசபையினால் ஏற்கனவே இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இனங்காணப்பட்டுள்ள ஏக்கர் 23 பேர்ச்சஸ் 12 விஸ்தீரணமுடைய சில காணித்துண்டுகளை முறையான சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசாங்க காணி கட்டளைச்சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு இறையிலி உரிமையுடன்கூடிய கொடைகளாக உடமையாக்கிக் கொள்ளும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.