• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்குதல்
- பெருந்தோட்ட மக்களுக்கு முழு உரிமையுடைய காணிகளை வழங்கும் பொருட்டு விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் மூலம் "பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்குதல்" என்னும் பிரேரிப்பபொன்று நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அரசாங்க பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்தாசையுடன் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சும் பெருந்தோட்ட வலையங்களுக்கான புதிய கிராம அபிவிருத்தி சபையும் இணைந்து நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீ்ழ் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் அரசுடமை பெருந்தோட்ட கம்பனிகள் என்பவற்றுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களில் வசிக்கும் 4,151 பயணாளிகள் இனங்காப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்கள் தற்போது குடியிருக்கும் காணிகளுக்கு துரிதமாக இறையிலி உறுதிகளை வழங்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.