2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
பாடசாலை மாணவிகளுக்கு விடாய்க்கால அணையாடை வசதிகளை வழங்குதல் - இலங்கையில் மொத்த மாணவர்கள் சுமார் 04 மில்லியன் ஆவதோடு, இதில் வயது வந்த மாணவிகள் சுமார் 1.2 மில்லியன் பேர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. குறித்த இந்த மாணவிகளில் அதி கஷ்ட பிரதேச பாடசாலைகள், கஷ்ட பிரதேச பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், பெருந்தோட்ட பாடசாலைகள் மற்றும் வறுமை நிலையிலுள்ள மாணவ மாணவிகளைக் கொண்ட நகர பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகள் 800,000 பேர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக வருடாந்தம் விடாய்க்கால அணையாடைகளை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |