• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கையில் குளிரூட்டி இயந்திரங்களின் வலுசக்தி வினைத்திறனை பரிசோதிப்பதற்கு ஆய்வுகூடமொன்றைத் தாபித்தல்
- பசுமை வீட்டு வாயு வௌியேற்றத்தை குறைக்கும் கருத்திட்டத்தின் கீழ் இலங்கையில் குளிரூட்டி இயந்திரங்களின் வலுசக்தி வினைத்திறனை பரிசோதிப்பதற்காக ஆயுவு கூடமொன்றைத் தாபிப்பதற்கு தென் கொரிய அரசாங்கத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரிய வலுசக்தி பணியகத்தின் ஊடாக நிதியளிக்கப்படும் இந்தக் கருத்திட்டத்தின் ஆய்வுகூடத்தை நிர்மாணிப்பத்றகும் தேவையான மனிதவளங்களை பயிற்றுவிப்பதற்குமான பணிகளை 2024 ஆம் ஆண்டில் முற்றாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு தெரிவித்து தென் கொரிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திடவுள்ள கலந்துரையாடல் குறிப்பு மற்றும் விசாரணை நியதிகள் என்பனவற்றுக்கு வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தி்னதும் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்கு இயலுமாகும் வகையில் இருநாடுகளுக்கும் இடையில் உடன்பாடு தெரிவிக்கும் கலந்துரையாடல் குறிப்பிலும் விசாரணை நியதிகளிலும் கைச்சாத்திடும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.