2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தை இல்லாதொழித்தல் - சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டவரைநரினால் வரையப்பட்ட சட்டமூலமானது அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2023‑06‑12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த திருத்தத்தின் மூலம் சட்டத்திலுள்ள பெரும்பாலான பிரிவுகளை திருத்தவேண்டி நேரிடுகின்றமையினால், பொதுமக்கள் இலவகுவாக புரிந்து கொள்ளும் முகமாக நடைமுறையிலுள்ள சட்டத்தை இல்லாதொழித்து, உரிய சகல திருத்தங்களையும் உள்ளடக்கி குறித்த சட்டத்தின் தற்போதைய பெயரின் கீழ் புதிய சட்டமொன்றை ஆக்கும் பொருத்தப்பாடு தெரியவந்துள்ளது. அதற்கிணங்க நடவடிக்கை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் புதிய சட்டமொறை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |