• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை கொடியின் கீழ் கப்பல்களை பதிவு செய்தலை மேம்படுத்துதல்
- கப்பல்களை பதிவு செய்தல் உள்நாட்டு பொருளாதாரத்திற்கு பாரிய அளவிலான அந்நிய செலாவணியை கொண்டுவரும் பிரதான வழிமுறையாவதோடு, இது சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தொழில்வாய்ப்புகள் உருவாகுவதற்கான வாய்ப்பு நிலவுகின்றது. இலங்கை கொடியின் கீழ் கப்பல்களை பதிவு செய்வதனை மேம்படுத்துவதற்காக தகைமையுடைய உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ஆர்வ வௌிப்படுத்தல்களை கோரி பிரேரிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவொன்றின் மூலம் குறித்த பிரேரிப்புகளை மதிப்பீடு செய்து, கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான நிறுவனமொன்றை தேர்ந்தெடுப்பதற்கும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.