2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
நுகர்வோருக்கு நியாயமான விலையில் முட்டை வழங்குவதற்குத் தேவையான முட்டை இறக்குமதி - உள்நாட்டு சந்தையில் முட்டை விலையினை நிலையாக பேணும் பொருட்டு 2024‑04‑30 ஆம் திகதி வரை தேவைப்படும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு 2023‑12‑18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஏற்கனவே சுமார் 18 மில்லியன் முட்டை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு, விழா காலத்திற்குத் தேவையான மேலும் சுமார் 42 மில்லியன் முட்டை இறக்குமதி செய்யவேண்டுமென கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முட்டைத் தொகையினை இறக்குமதி செய்வதற்கு விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களிடமிருந்து விலை கோரப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய பெறுகையினை வழங்குவதற்கு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |