2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்குதல் - 2023 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் சமுர்த்தி பயனாளிகள் அடங்கலாக 25 மாவட்டங்களில் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களை தழுவும் விதத்தில் குடும்பம் ஒன்றுக்கு மாதமொன்றில் 10 கிலோ கிராம் நாட்டரிசி வீதம் இரண்டு மாத காலப்பகுதிக்கு அரிசி வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனங்காணப்பட்ட குறைந்த வருமானம் பெறுவோரின் போஷாக்கு மட்டத்தைப் பேணுவதற்கு உதவியாக நடப்பாண்டிலும் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. அதற்கிணங்க, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை இணைத்துக் கொண்டு மாவட்ட செயலாளர்களின் / அரசாங்க அதிபர்களின் ஊடாக இனங்காணப்பட்ட குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களைத் தழுவும் விதத்தில் குடும்பம் ஒன்றுக்கு மாதம் ஒன்று சார்பில் 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை இரண்டு மாத காலப்பகுதிக்கு நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |