• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம் (அழைப்பாணை விடுத்தல் மற்றும் கையளித்தல்)
- விரைவு தபால் சேவை மற்றும் மின்னஞ்சல் மூலம் அழைப்பாணை கையளிக்கும் முறைகளையும் வழமையான சேவைகளாக உள்வாங்குவதன் மூலம் குடியியல் நடவடிக்கைமுறை சட்ட பணிகளுக்குரியதாக அழைப்பாணை விடுத்தல் மற்றும் கையளித்தல் நடவடிக்கைமுறையினை விருத்தி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் அதேபோன்று சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் மேலும் சில திருத்தங்களையும் உள்ளடக்கி குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையைத் திருத்தும் பொருட்டு 2021‑10‑11 ஆம் 2023‑07‑31 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.