• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஒரு தனியான அரசாங்க தொழில்முயற்சியொன்றாக தாபித்தல்
- இலங்கையிலுள்ள ஒரே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது 1969 ஆம் ஆணடில் ஆரம்பிக்கப்பட்டதோடு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் உற்பத்திக்கான உள்ளூர் கேள்வியின் சுமார் 25 சதவீதம் இந்த சுத்திகரிப்பு நிலையத்தினால் வழங்கப்படுகின்றது. உரிய சுத்திகரிப்பு நிலையத்தை முறைப்படுத்தி மேலும் சுமார் 25 வருட காலத்திற்கு பயன்படுத்துவதற்கு முதலீட்டினை மேற்கொள்ளும் தேவை இனங்காணப்பட்டுள்ளதோடு, இதற்குத் தேவையான முதலீடுகள் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு தனியார் துறை மூலம் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தனியான அரசாங்க தொழில்முயற்சியொன்றாக தாபிப்பது பொருத்தமான தென்பது தெரியவந்துள்ளது. அதற்கிணங்க, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஒரு தனியான அரசாங்க தொழில்முயற்சியொன்றாக தாபிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.