2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
'உருமய' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பூரண உரிமையுடன்கூடிய இறையிலி கொடைப் பத்திரங்களை வழங்குவது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்தல் மற்றும் ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இளம் தொழில்முயற்சியாளர்கள் தொடர்பிலான தகவல்களை நாடு முழுவதும் தழுவும் விதத்தில் சேகரித்தல் தொடர்பிலான நாடு தழுவிய நிகழ்த்தித்திட்டம் - தற்போது நாட்டில் அண்ணளவாக 2 மில்லியன் குடும்பங்களுக்கு அவர்கள் பயன்படுத்திவரும் காணிகளுக்கான கொடைப்பத்திரங்கள் / உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'உருமய' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டில் குறித்த கொடைப்பத்திர தாரர்களுக்கும் உரிமப்பத்திரதாரர்களுக்கும் அரசாங்க காணிகளின் இறையிலி உரிமையினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, நாடு முழுவதும் ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் இரண்டையும் நடைமுறைப்படுத்தவதற்குத் தேவையான தகவல்கள் 14,022 கிராம உத்தியயோகத்தர் பிரிவுகளை தழுவும் விதத்தில் தேசிய இளைஞர் சேவை சபையின் படையணியினை பயன்படுத்தி உரிய பிரிவுகளைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சேகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் நிலவும் பொறிமுறையினை பயன்படுத்தி தேவையான தகவல்களை சேகரித்து 'உருமய' நிகழ்ச்சித்திட்டத்தையும் ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தையும் துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |