• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அஸ்வெசும சமூக நலன்புரி நலன்கள் திட்டத்தின் கீழ் நலன்களை பெறும் குடும்பங்களை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
- 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக நலன்புரி நலன்களை வழங்கும் திட்டமொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2023‑04‑17 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அஸ்வெசும சமூக நலன்புரி நலன்கள் திட்டத்தின் கீழ் நலன்களை பெறும் குடும்பங்களை மூன்று வருட காலத்திற்குள் பொருளாதார, சமூக மற்றும் உள ரீதியாக பலப்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 25 மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் 16,000 பயனாளி குடும்பங்களை இலக்காகக்கொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி என்பவற்றின் நிதியுதவியுடனும் உள்நாட்டு நிதியுடனும் முன்னோடி கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கும் இந்த முன்னோடி கருத்திட்டத்தின் பெறுபேற்றின் அடிப்படையில் பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவற்றிலும் இனங்காணப்படும் பயனாளி குடும்பங்களை பலப்படுத்தும் பொருட்டு உரிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.