• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
கொழும்பு நகரத்திற்கு அண்மித்த பிரதான புகையிர நிலையங்கள் அமைந்துள்ள கட்டடங்களை வர்த்தக மத்திய நிலையங்களாக விருத்தி செய்தல்
- கொழும்பு நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வௌ்ளவத்தை, பம்பலப்பிட்டிய, கொள்ளுபிட்டிய மற்றும் கொம்பனித்தெரு ஆகிய புகையிரத நிலையங்கள் அமைந்துள்ள காணி மற்றும் கட்டடங்களை வர்த்தக மத்திய நிலையங்களாக விருத்தி செய்யும் உயர் தேவை நிலவுகின்றதென 2023‑11‑06 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த புகையிரத நிலையங்கள் உட்பட இவற்றுக்கு மேலதிகமாக தெஹிவளை மற்றும் கல்கிஸ்சை ஆகிய புகையிர நிலையங்களையும் அரசாங்க - தனியார் பங்குடமையின் கீழ் நிர்மாணித்து செயற்படுத்தி கையளிக்கும் முறையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கும் இதன் பொருட்டு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வ வௌிப்படுத்தல்களை கோருவதற்குமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினாலும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.