• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் நேபாளம் வௌிநாட்டலுவல்கள் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை புதுப்பித்தல்
- இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் நேபாளம் வௌிநாட்டலுவல்கள் நிறுவனத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி பரிமாறல்களை விருத்தி செய்யும் நோக்கில் 2018‑09‑01 ஆம் திகதி தொடக்கம் 04 வருட காலப்பகுதிக்கு செல்லுபடியாகும் விததத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலப்பகுதியானது 2022 ஆம் ஆண்டில் முடிவடைந்துள்ளது. இரு தரப்பினர்களினதும் உடன்பாட்டின் மீது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் செயற்பாட்டுக் காலத்தை ஐந்து (05) வருடங்களுக்கு ஒருதடவை நீடிப்பதற்கு இயலுமாகும் வகையில் ஏற்பாடுகளைத் திருத்தி புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.