• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-03-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பணப்பறிப்பு மென்பொருளுக்கு எதிரான சர்வதேச ஆரம்ப மாநாடு
- பணப்பறிப்பு மென்பொருளுக்கு எதிரான சர்வதேச ஒருங்கிணைப்பு சார்பில் ஐக்கிய அமெரிக்க குடியரசினால் மேலும் சில நாடுகளுடன் 2021 ஆம் ஆண்டில் பொது மேடையொன்றாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பணப்பறிப்பு மென்பொருளுக்கு எதிரான சர்வதேச ஆரம்ப மாநாட்டில் இணைந்து கொள்ளுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆரம்ப நடவடிக்கைக்கு உலகம் முழுவதுமுள்ள 48 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் அதேபோன்று சர்வதேச பொலிசும் இணைந்து கொண்டுள்ளன. இலங்கையும் அண்மைக் காலமாக பணப்பறிப்பு மென்பொருள் காரணமாக பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளமையில் பணப்பறிப்பு மென்பொருளுக்கு எதிரான சர்வதேச ஆரம்ப மாநாட்டுடன் இணைந்து நலன்களை அடைவதற்கு இயலுமென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பணப்பறிப்பு மென்பொருளுக்கு எதிரான சர்வதேச ஆரம்ப மாநாட்டில் இணைந்து இது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தொழிநுட்ப அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.