2024-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை வரைதல் - புதிய நிதிச் சட்ட கட்டமைப்பொன்றை வரைவதற்கும் உத்தேச அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டத்தில் குறித்த அரசாங்க நிதி சட்ட கட்டமைப்பை உள்வாங்குவதற்கும் 2023‑05‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் அரசாங்க நிதி திணைக்களத்தினால் ஏனைய திறைசேரி திணைக்களம் மற்றும் பிரதி திறைசேரி செயலாளர்கள் இருவரினது இணை தலைமையின் கீழ் நியமிக்கப்பட்ட மேற்பார்வை குழுவின் மதியுரை மற்றும் கொள்கை வழிகாட்டலின் கீழ் ஆரம்ப வரைவொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆரம்ப வரைவினை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் உத்தேச சட்டமூலம் சட்டவரைநரினால் தயாரிக்கப்படும் வரை நிதி ஒழுங்குவிதிகளை வரைவதை ஆரம்பிப்பதற்கு நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு திறைசேரியின் செயலாளருக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |