• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பத்தரமுல்லை Waters Edge மனையிடத்தில் அமைந்துள்ள இரண்டு காணித்துண்டுகளை கொழும்பு 10, அசோகா வித்தியாலயத்திற்கும் இலங்கை கடற்படைக்கும் குத்தகை அடிப்படையில் கையளித்தல்
- பத்தரமுல்லை Waters Edge மனையிடத்தில் அமைந்துள்ள றூட் 2 பர்ச்சர்ஸ் 30.89 விஸ்தீரணமுடைய காணித்துண்டை இலங்கை கடற்படையின் படகு ஓட்டுதல் மற்றும் உயிர் காப்பு முகாம் பயிற்சியளிப்பிற்காக கடற்படைக்கும் ஏக்கர் 4 றூட் 2 பேர்ச்சர்ஸ் 1.60 விஸ்தீரணமுடைய காணித்துண்டை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தும் பொருட்டு கொழும்பு 10, அசோகா வித்தியாலயத்திற்கும் காணி ஆணையாளர் நாயகத்தின் ஊடாக நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.