• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி துறையினை மீளக் கட்டியெழுப்புவதற்கான கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- நிலவும் பொருளாதார பின்னடைவின் பெறுபேறாகவும் கட்டுப்பாட்டில் இல்லாத வௌிவாரி காரணிகளின் தாக்கத்தினாலும் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, சுற்றுலா, ஆடை மற்றும் பிற பல்வேறு வர்த்தக செயற்பாடுகள் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் கணிசமானோருக்கு அவர்களுடைய தொழில்முயற்சிகளை தொடர்ந்தும் நடாத்திச்செல்வது மிகவும் கடினமாகவுள்ளது. இதன் பொருட்டு சலுகையொன்றாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி துறை சார்பில் தொழிற்படு மூலதன உதவிகளை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் தற்போது செயற்படுத்தப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு அவர்களுடைய வர்த்தகங்களை தொடர்ந்தும் விரிவுபடுத்திக்கொள்வதற்கும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கும் தேவையான கடன் வசதிகளை அனுமதிப்பத்திரம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெற்ற விசேட வங்கிகள் ஊடாக சலுகை வட்டி வீதத்தில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு ஆக்கக்கூறுகைளைக் கொண்ட குறித்த கருத்திட்டத்திற்கு 20 பில்லியன் ரூபா பயன்படுத்தப்படவுள்ளதோடு, அதிலிருந்து 15 பில்லியன் ரூபா தற்போது நடாத்திச்செல்லப்படும் அத்துடன் புதிய தொழில்முயற்சிகளை பலப்படுத்துவதற்காகவும் மீதி 5 பில்லியன் ரூபா செயற்பாடற்ற கடன் பிரிவின் கீழுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கு உதவுவதற்குமாக பயன்படுத்தப்படும். அதற்கிணங்க, உத்தேச கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.