• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சிறுவர் உரிமைகள் பற்றிய கூட்டு சட்டத்தை வரைதல்
- அண்மைகாலமாக ஒட்டுமொத்த சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நல் வாழ்வினை உறுதிசெய்வது சவாலாகவுள்ளது. விசேடமாக பிள்ளைகள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாதல், அவர்கள் பல்வேறு துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல் அதேபோன்று அவர்களுடைய உரிமைகளை அனுபவிப்பதற்குள்ள சந்தர்ப்பங்கள் இல்லாமற்போவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் அறிக்கையிடப்பட்டுள்ளன. ஆதலால் இலங்கையில் பிள்ளைகளின் பாதுகாப்பினையும் பராமரிப்பினையும் உறுதிப்படுத்துவதற்காக தற்போதுள்ள ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக சிறுவர் உரிமை சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் இணைந்த சட்டமொன்றை தயாரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. "எதிர்வரும் 25 ஆண்டுகள்" என்னும் தலைப்பில் 2023‑01‑09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் ஊடாக "சிறுவர் பாதுகாப்பு சட்டம்" என்னும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சிறுவர் உரிமைகள் பற்றிய கூட்டு சட்ட மூலமொன்றை வரைவதன் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.