2024-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
உத்தேச இந்திய ‑ இலங்கை பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மீதான கலந்துரையாடல்களின் தற்போதைய நிலைமை - உத்தேச இந்திய ‑ இலங்கை பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மீதான 13 ஆவது சுற்று கலந்துரையாடல் 2024‑01‑08 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை புதுடில்லியில் நடாத்தப்பட்டது. அதன்போது “பொருட்களின் வர்த்தகம்", “முகவுரை, பொது ஏற்பாடுகள் மற்றும் பொது விதிவிலக்குகள்", "சேவைகளின் வர்த்தகம்", “மூலவிதிகள், “சுங்க நடைமுறைகள் மற்றும் வர்த்தக வசதிப்படுத்தல்", "சுகாதாரம் மற்றும் தாவர சுகாதாரம் பற்றிய நடவடிக்கைகள்", “வர்த்தகத்திற்கான தொழினுட்ப தடைகள்", வர்த்தக தீர்வுகள்" மற்றும் பொருளாதார, தொழிநுட்ப ஒத்துழைப்புகள்" போன்ற ஒன்பது உப குழுக்களினால் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2024 பெப்ரவரி மாத இறுதியில் பிணக்குகளைத் தீர்த்தல் மற்றும் இறுதி ஏற்பாடுகள் தொடர்பிலான உபகுழு புதுடில்லியில் உரிய அத்தியாயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளது. அதேபோன்று உத்தேச ஒத்துழைப்பு உடன்படிக்கையின் 14 ஆவது சுற்று கலந்துரையாடல் 2024 மார்ச் முதல் வாரத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச இந்திய ‑ இலங்கை பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மீதான கலந்துரையாடல்களின் தற்போதைய நிலைமை சம்பந்தமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. |