• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கையின் கரையோர காற்று வளத்தினை பயன்படுத்துதல்
- அண்மையில் உலக வங்கி மதியுரைஞர்களினால் கரையோர காற்று வளத்தின் அபிவிருத்தி தொடர்பில் சாத்தியதகவாய்வொன்று மேற்கொள்ளப் பட்டுள்ளதோடு, இந்த ஆய்வின் பெறுபேற்றின் அடிப்படையில் வடக்கு, மேற்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய பிரதேசங்களில் பாரிய அளவிலான கரையோர காற்று மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் பிறப்பிப்பதற்கு அதிகளவு வாய்ப்பு உள்ள பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க நாட்டில் பாரிய அளவிலான மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்களிப்பினை அதிகரிப்பதற்கும் அளவீட்டு ரீதியிலான சிக்கனத்தினை விருத்தி செய்து தனியார்துறை முதலீட்டின் மூலம் இலங்கையில் கரையோர காற்று வளத்தினை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.