• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஶ்ரீ நாராயணன் குரு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆசிரமமொன்றை நிர்மாணிப்பதற்காக காணித்துண்டொன்றை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
- ஶ்ரீ நாராயணன் குரு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய உதவி திட்டத்தின் கீழ் ஆசிரமமொன்றை நிர்மாணிப்பதற்காக நுவரெலியா மாவட்டத்திலிருந்து காணித்துண்டொன்றை பெற்றுத் தருமாறு ஶ்ரீ நாராயணன் தர்ம சங்கம் கொழும்பு நம்பிக்கை பொறுப்பு சபையினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளதும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமானதுமான ரம்பொட வத்த என்னும் காணியிலிருந்து ஏக்கர் 06 றூட் 02 விஸ்தீரணமுடைய காணியானது இனங்காணப்பட்டுள்ளது. இந்த காணித்துண்டை முப்பது (30) வருட நீண்டகால குத்தகை அடிப்படையில் ஶ்ரீ நாராயணன் தர்ம சங்கம் கொழும்பு நம்பிக்கை பொறுப்பு சபைக்கு வழங்கும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.