• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
காணி அனுமதிப் பத்திரதாரர்களுக்கும் கொடை பத்திரதாரர்களுக்கும் அரசாங்க காணிகளில் இறையிலி உரிமையினை வழங்கும் "உருமய நிகழ்ச்சித்திட்டத்தை" இலங்கை மகாவலி அதிகாரசபையினால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் சார்பிலும் ஏற்புடைத்தாக்கிக் கொள்ளல்
- காணி அனுமதிப் பத்திரதாரர்களுக்கும் கொடை பத்திரதாரர்களுக்கும் அரசாங்க காணிகளில் இறையிலி உரிமையினை வழங்கும் "உருமய நிகழ்ச்சித்திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை யினால் 2023‑12‑11 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அதன் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக இலங்கை மகாவலி அதிகாரசபையினால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் சார்பிலும் "உருமய நிகழ்ச்சித்திட்டத்தை" நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.