• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை புலம்பெயர் ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டம்
- இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உரிமம் பெற்ற வங்கிகளின் ஒத்துழைப்புடன் புலம்பெயர் ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆகக்கூடுதலாக 10 மில்லியன் ரூபாவைக் கொண்ட கடன் வசதியினை வழங்குவதற்கும் இதற்கான வட்டியின் ஒரு பகுதியினை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஏற்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. உத்தேச கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்படும் கடன் தொகையானது கடன் பெறுநரானவர் வௌிநாட்டில் தொழில் புரியும் காலப்பகுதியினுள் சட்டபூர்வமான வழிமுறைகளில் அனுப்பும் வௌிநாட்டு நாணயத்தில் செலுத்தவேண்டும் என்பதோடு, வௌிநாட்டில் தொழில் முடிவுறுத்தி இந்நாட்டிற்கு வந்ததன் பின்னர், இலங்கை நாணயத்தில் செலுத்துவதற்கும் வாய்ப்பு வழங்கப்படும். அதற்கிணங்க உத்தேச வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.