2024-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
கம்பஹா பியகம பிரதேசத்தில் தேசிய வைத்தியசாலையொன்றையும் சிறுவர் வைத்தியசாலையொன்றையும் தாபித்தல் - கம்பஹா மாவட்டத்தில் காணப்படும் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் கைத்தொழில் மயமாக்கலுக்கு ஒருங்கிணைவாக இந்த மாவட்டம் பிரதான சேவை வழங்கும் மையமாக செயற்படுகின்றது. இதன் காரணமாக சுகாதார சேவைக்கான கேள்வி அதிகரித்து வருகின்றதோடு, இந்த கேள்வியினை பூர்த்தி செய்வதற்கு தேசிய வைத்தியசாலையொன்றையும் சிறுவர் வைத்தியசாலையொன்றையும் தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அரசாங்க - தனியார் பங்குடமை திட்டத்தின் கீழ் தேசிய வைத்தியசாலையொன்றையும் சிறுவர் வைத்தியசாலை யொன்றையும் இந்த மாவட்டத்தில் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு பியகம வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள ஏக்கர் 7 றூட் 3 விஸ்தீரணமுடைய இரண்டு (02) காணித்துண்டுகளை சுவீகரித்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை செய்ததன் பின்னர், உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் சுகாதார அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |