• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
வணிக பெருந்தோட்ட முகாமைத்துவம்
- மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் போன்ற அரசாங்க பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான பாரிய அளவிலான காணிகள் சட்டரீதியிலான பிணக்குகள், நிறுவன ரீதியிலான பிணக்குகள், மூலதன பற்றாக்குறை போன்ற காரணங்களினால் நீண்ட காலமாக பயிர் செய்யாமலும் அல்லது பயனுள்ள வகையில் பயன்படுத்தாமலும் உள்ளமை 2023 ஆம் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வரவுசெலவுத்திட்ட உரைகளின் போது மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய பாரிய அளவிலான காணிகள் மற்றும் பயன்பாடு குறைவான காணிகள் ஏற்றுமதி செய்யக்கூடிய பயிர்களை பயிரிடுதல், ஏற்றுமதி சார்பில் கால்நடை பண்ணைகளை உருவாக்குதல் உட்பட ஏனைய ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்தல் தொடர்பில் தெரிவுசெய்யப்படும் ஆற்றலுள்ள முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களுடன் இணைந்து சமூகத்திற்கு பலவித நலன்கள் கிடைக்கும் விதத்தில் குறித்த காணிகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் பொருட்டு அமைச்சரவை அந்தஸ்தற்ற அரச பெருந்தோட்ட தொழில்முயற்சி மறுசீரமைப்பு அமைச்சினால் பெருந்தோட்டத்திற்கான மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.