• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2024 ஆம் ஆண்டில் தேர்தல்களை நடாத்துதல்
- அரசாங்கத்தின் தற்போதைய வரையறுக்கப்பட்ட நிதியளவிற்குள் 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில் தேர்தல்களை நடாத்துவதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றுக்கான செலவுகள் குறித்த நிதி ஏற்பாட்டிற்குள் முகாமித்துக்கொள்ள நேரிடுமென்பதுவும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதேபோன்று, மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் என்பவற்றை நடாத்துவதற்குத் தேவையான நிதி அரசாங்கத்தின் தற்போதைய வரையறுக்கப்பட்ட நிதியளவிற்குள் 2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக வழங்க நேரிடுமென்பதுவும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆயினும், 2025 ஆம் ஆண்டில் குறித்த இந்த இரண்டு (02) தேர்தல்களையும் நடாத்துவதற்கு முன்னர், 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் (393 ஆம் அத்தியாயம்) பிரகாரம் தாபிக்கப்பட்டதும் 2023‑10‑16 ஆம் திகதியிடப்பட்டதும் 2354/06 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளதுமான விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டு, தேவையாயின் உரிய தேர்தல் சட்டங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற அங்கீகாரத்தின் மீது அறிமுகப்படுத்தவேண்டுமெனவும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விடயங்களை அடிப்படையாயக் கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவையினால் அதன் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.