2024-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளை கட்டம் கட்டமாக நீக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தற்போது அமுலிலுள்ள அந்நிய செலாவணி ஒழுங்குவிதிகள் சார்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் - சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு அமைவாக நாட்டின் செலுத்த வேண்டிய இருப்புகள் நிலைபேறாக வரும்போது கட்டம் கட்டமாக நிர்வாக நடவடிக்கைகளை தளர்த்துவதற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளது. இதற்கமைவாக சில நடமாடும் வௌிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் சார்பில் இலங்கை ரூபாவை அந்நிய செலாவணியாக மாற்றுவதை தடை செய்வதற்குரிய அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளை தளர்த்தும் கட்டம் கட்டமான திட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை நடைமுறைப்பத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சபை சிபாரிசு செய்துள்ளது. அதற்கிணங்க 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 7(1) ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக ஆக்கப்பட்டுள்ள கட்டளைகளை வௌியிடுவதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |